செய்திகள்
தற்கொலை

பாபநாசம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-10-11 12:12 GMT   |   Update On 2020-10-11 12:12 GMT
பாபநாசம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மேலகளக்குடியை சேர்ந்தவர் கருப்பன் மகன் சக்திவேல் (வயது 36). விவசாயி. இவருக்கு கலைச்செல்வி (28) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக சக்திவேல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் நாற்று பறிப்பதற்கு குலமங்கலம் வெண்ணாற்றங்கரையில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளது.

இதில் மனமுடைந்த சக்திவேல் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து, வயலில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News