செய்திகள்
தஞ்சையில் வருவாய்துறை கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் கருணாநிதி, பரஞ்சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் நல்லதம்பி கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான போனஸ் வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று கிராம உதவியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.காலிபணியிடங்களை நிரப்பவேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கஜேந்திரன் நன்றி கூறினார்.