செய்திகள்
அமைச்சர் அன்பழகன்

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு: அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து கலந்தாய்வு

Published On 2020-09-28 12:31 GMT   |   Update On 2020-09-28 12:48 GMT
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டதில், சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட்ஆஃப் மார்க் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது. தமிழக உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன் முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ- மாணவிகள் பெயரை வெளியிட்டார்.

சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட்ஆஃப் மார்க் பெற்று முதல் இடம் பிடித்தார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவன் 199.67 மார்க் பெற்று 2-வது இடம் பிடித்தார். 199.5 மார்க் பெற்று காவ்யா என்ற மாணவி 3-வது இடம் பிடித்தார்.

அக்டோபர் 1-ந்தேதி கலந்தாய்வு தொடங்கும். 1-ந்தேதி முதல் 5-ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அக்டோபர் 8-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நான்கு கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News