செய்திகள்
தற்கொலை

புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-09-28 07:34 GMT   |   Update On 2020-09-28 07:34 GMT
புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). விவசாயி. இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஒரு கையும், காலும் செயலிழந்து விட்டது. இதைத்தொடர்ந்து மன வேதனையில் இருந்து வந்த ராமசாமி கடந்த 25-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் (38) கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News