செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மோதி பலி

Published On 2020-09-26 10:55 GMT   |   Update On 2020-09-26 10:55 GMT
திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
நீடாமங்கலம்:

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி வண்ட்ராயன் கட்டளை பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு(வயது 41). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் வழியாக திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

ஆதனூர் ரெயில்வே கேட் பகுதியில் சிட்டிபாபு சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த லாரி, அவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News