செய்திகள்
வெண்ணந்தூரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வெண்ணந்தூரில் தொழிலாளர்கள் நல வாரிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூரில் தொழிலாளர்கள் நல வாரிய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கலைவாணன் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர்களின் ஆன்லைன் பதிவுகளை எளிமையாக்க வேண்டும். பொது முடக்கத்தினால் வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகையை, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். நாட்டின் பொது துறைகளை தனியார் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.