செய்திகள்
பிரதமர் மோடி

குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதல் தொடரும்- மோடி, உள்ளிட்ட முக்கிய செய்திகள் வீடியோ தொகுப்பாக...

Published On 2020-09-20 14:07 GMT   |   Update On 2020-09-20 14:07 GMT
வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதல் தொடரும் என பிரதமர் உறுதி அளித்தது உள்பட முக்கியச் செய்திகள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அடிமைகளாக மாற்றப்படுவார்கள்- வேளாண் மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் - முத்தரசன்

வேளாண் மசோதாக்களை ஆதரிக்கும் ஒரே ஒரு விவசாயி எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு ஏன்? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

வேளாண் மசோதாவுக்கு, மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு ஏன்? என்று முதல்வர் பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பைக் மீது கார் மோதல்- 4 பேர் உயிரிழப்பு

திருப்பூர் ரங்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதல் செய்யும் முறை தொடரும்- பிரதமர் மோடி உறுதி

குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் நடைமுறை தொடரும் என பிரதமர் மோடி உறுதிபட கூறி உள்ளார்.

முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி

முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனாவை வீழ்த்திய 106 வயது மூதாட்டி

மகாராஷ்டிராவில் 106 வயது நிரம்பிய மூதாட்டி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம் -மசோதா நிறைவேற்றம் குறித்து ராஜ்நாத் சிங் கருத்து

மாநிலங்களவையில் இன்று 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வேளாண்மையில் சுயசார்புக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

டெத் ஓவர்களில் பேட்டிங்கிலும் திறனை வெளிப்படுத்த முடியும்: ரஷித் கான்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், டெத் ஓவர்களில் பேட்டிங்கிலும் திறனை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் அனுராக் காஷ்யப் மீது பிரபல நடிகை பாலியல் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-------------------------------
Tags:    

Similar News