செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

விமர்சிப்பதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட வேண்டும்: அமைச்சர் உதயகுமார்

Published On 2020-09-20 11:05 GMT   |   Update On 2020-09-20 11:05 GMT
சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை தடுக்க வழக்கு தொடர வேண்டும் என தமிழக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர் உதயகுமார் இன்று மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற வழக்கறிஞர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ‘‘சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர வேண்டும். அமைச்சரை விமர்சிக்கக் கூடாது என்பதை எச்சரிக்கும் வகையில் வழக்கு தொடர வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
Tags:    

Similar News