செய்திகள்
சாமளாபுரம் அருகே மது விற்றவர் கைது
காளிபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்கலம்:
மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் சாமளாபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது காளிபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 32) என்பவரை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்த 6 மதுபாட்டில்களையும், மது விற்பனை செய்த ரூ.200 யும் பறிமுதல் செய்தனர்.