செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் கஞ்சா வியாபாரி கைது

Published On 2020-09-18 08:41 GMT   |   Update On 2020-09-18 08:41 GMT
திருப்பூரில் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக மத்திய போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கே.வி.ஆர்.நகர் பகுதியில் தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் அங்கு கஞ்சா விற்பனை செய்த கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம் (வயது 40) என்பவரை பிடித்தனர். 

அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் திருப்பூர் மத்திய போலீசார் 5 கஞ்சா வியாபாரிகளை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News