செய்திகள்
கைது

போளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

Published On 2020-09-15 11:52 GMT   |   Update On 2020-09-15 11:52 GMT
போளூர் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூர் மாயன் தெருவில் வசிப்பவர் மணி. இவரது மனைவி ராணி (வயது 50), சாராயம் விற்பதாக போளூர் இன்ஸ்பெக்டர் அருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ராணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

போளுரை அடுத்த செங்கனாவரம் பகுதியை சேர்ந்தவர் மொச்சகொட்டை என்ற ஏழுமலை. இவரது மனைவி சரஸ்வதி அவரது சொந்த ஊரான வடுகசாத்து கிராமத்தில் நேற்று பகலில் பாத்திரத்தில் வைத்து சாராய விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வடுகசாத்து கிராமத்திற்கு சென்று சாராயம் விற்று வந்த சரஸ்வதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சரஸ்வதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News