செய்திகள்
கைது

ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2020-09-05 12:27 GMT   |   Update On 2020-09-05 12:27 GMT
ஆற்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள தோப்புகானா பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதில் கூறவே அவர்களை ஆற்காடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். அதில் பிடிபட்ட வாலிபர்கள் ஆற்காடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (வயது 21), திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா அரையாளம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (21) என்பதும், ஆற்காடு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News