செய்திகள்
குமரி அனந்தன்

எச்.வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மயங்கி விழுந்த குமரி அனந்தன்

Published On 2020-08-29 01:58 GMT   |   Update On 2020-08-29 01:58 GMT
எச்.வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு அவரது சகோதரர் குமரி அனந்தன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:

காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாரின் சகோதரர் குமரி அனந்தன் தனது மகளும், தெலுங்கானா கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன் அங்குள்ள கவர்னர் மாளிகையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது சகோதரர் எச்.வசந்தகுமார் மரணம் அடைந்த செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
Tags:    

Similar News