செய்திகள்
அவினாசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
அவினாசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
அவினாசியை அடுத்த ராயம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் தமிழரசன் (வயது21). இந்த நிலையில் தமிழரசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து தமிழரசன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.