செய்திகள்
விபத்து பலி

லாரி மோதி ஆம்புலன்ஸ் உதவியாளர் பலி

Published On 2020-08-15 14:39 GMT   |   Update On 2020-08-15 14:39 GMT
லாரி மோதி ஆம்புலன்ஸ் உதவியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொங்கணாபுரத்தை அடுத்த எலவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கோபி (வயது 27). இவர் குமாரபாளையத்தில் 108 ஆம்புலன்சில் உதவியாளராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டியில் திரும்பிக்கொண்டிருந்தார். சங்ககிரி-கொங்கணாபுரம் சாலையில் தங்காயூர் அருகே வந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே கோபி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன கோபிக்கு கடந்த 10 மாதத்திற்கு முன்பு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:    

Similar News