செய்திகள்
ஆரணி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். நெசவுத் தொழிலாளியான இவருக்கு 14 வருடங்களுக்கு முன்பு சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரியா (வயது 33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாருகேஷ், யுவன்சங்கர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரியா வீட்டில் மின் விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரியா ஏற்கெனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். நெசவுத் தொழிலாளியான இவருக்கு 14 வருடங்களுக்கு முன்பு சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரியா (வயது 33) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சாருகேஷ், யுவன்சங்கர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பிரியா வீட்டில் மின் விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரியா ஏற்கெனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் வினாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.