செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய 2 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா ஆடையூர் தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக தேவனந்தலில் இருந்து செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கம் சாலையில் இருந்து கிரிவலப் பாதைக்கு பிரியும் பகுதியில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோவிந்தசாமி வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-த்தை பறித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கோவிந்தசாமி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு சரவணன் (வயது 21), பேகோபுரத் தெருவை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை தாலுகா ஆடையூர் தேவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக தேவனந்தலில் இருந்து செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கம் சாலையில் இருந்து கிரிவலப் பாதைக்கு பிரியும் பகுதியில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கோவிந்தசாமி வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-த்தை பறித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து கோவிந்தசாமி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு சரவணன் (வயது 21), பேகோபுரத் தெருவை சேர்ந்த விக்னேஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.