செய்திகள்
சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் விழா
தேசூர் அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாட புத்தகம், புத்தகப்பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சேத்துப்பட்டு:
தேசூர் அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாட புத்தகம், புத்தகப்பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகம், நோட்டு, பை போன்றவற்றை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி வழங்கினார். இதில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி விட்டு வாங்கி சென்றனர்.