செய்திகள்
வழக்கு பதிவு

அன்னூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-08-03 14:55 GMT   |   Update On 2020-08-03 14:55 GMT
அன்னூர் அருகே உள்ள கரியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அன்னூர்:

அன்னூர் அருகே உள்ள கரியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது. இதையடுத்து அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5,600, சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 சேவல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News