செய்திகள்
அபராதம்

புகையிலை பொருட்கள் விற்பனை: கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2020-08-01 08:09 GMT   |   Update On 2020-08-01 08:09 GMT
13 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தோகைமலை:

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னப்பனையூர், நெய்தலூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர் ராமசாமி, பொன்னுச்சாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதிகளில் உள்ள 13 கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News