செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூரை சேர்ந்தவர் அல்லிமுத்து (வயது 65). ஆடுமேய்க்கும் தொழிலாளியான இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.