செய்திகள்
தங்கம்

புதிய உச்சத்தில் தங்கம் விலை- ரூ.41 ஆயிரத்தை தொட்டது

Published On 2020-07-31 05:38 GMT   |   Update On 2020-07-31 05:38 GMT
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை:

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.41,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.5,125க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ.71.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
Tags:    

Similar News