செய்திகள்
ஆம்புலன்ஸ் - கோப்புப்படம்

ஆம்புலன்ஸ் வசதியை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-07-20 08:26 GMT   |   Update On 2020-07-20 08:26 GMT
ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் சராசரியாக தினசரி 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கோ அல்லது பராமரிப்பு மையங்களுக்கோ உடனடியாக கொண்டு செல்ல தேவையான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத நிலையே உள்ளது. தற்போது உள்ள நிலையில் 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News