செய்திகள்
விபத்து

திண்டிவனம் அருகே விபத்து- குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

Published On 2020-07-16 02:44 GMT   |   Update On 2020-07-16 02:44 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம்:

நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் காரில் சென்ற குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News