செய்திகள்
எஸ்ஐ பாலகிருஷ்ணன்

சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2020-07-15 14:55 GMT   |   Update On 2020-07-15 14:55 GMT
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தந்தை மரண வழக்கில் கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் கோரிய மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.ஐ. பால்துரை உடல்நலக்குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News