செய்திகள்
நாவலர் நெடுஞ்செழியன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச்சிலை: பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர்

Published On 2020-07-10 13:30 GMT   |   Update On 2020-07-10 13:30 GMT
நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முழு திருவுருவ வெண்கலச்சிலை அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாள் நாளை (ஜூலை 11) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.

அவரது பிறந்த நாள் (ஜூலை 11) அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனடிப்படையில் அவரது பிறந்த நாள் அன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்.
Tags:    

Similar News