செய்திகள்
வாகன சோதனை கோப்புப்படம்

ஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 17 கோடியை தாண்டிய அபராத தொகை

Published On 2020-07-06 11:49 GMT   |   Update On 2020-07-06 13:03 GMT
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.17.21 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது
 
சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டதற்காக 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுவரை மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் ரூ.17 கோடியே 21 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News