செய்திகள்
போலீஸ் நிலையம்

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா : சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது

Published On 2020-07-06 09:30 GMT   |   Update On 2020-07-06 09:30 GMT
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத்தை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
சிவகாசி:

சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 40 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையம் நேற்று இரவு 8.20 மணிக்கு பூட்டப்பட்டது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சிவகாசி நகராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் கொரோனா தடுப்பு பணியில் மீண்டும் தீவிரம் காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News