செய்திகள்
சாத்தான்குளம் காவல்நிலையம்

சாத்தான்குளம் வழக்கு- சிசிடிவி காட்சிகள் குறித்து புதிய தகவல்

Published On 2020-07-06 07:05 GMT   |   Update On 2020-07-06 07:05 GMT
சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி:

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி ஐஜி சங்கர் அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகள் ஒரே நாளில் DELETE ஆகும் வகையில் செட் செய்யப்பட்டிருப்பதாக சொன்னதில் புதிய திருப்பமாக, சிசிடிவி காட்சிகளின் அமைப்புகளை தங்களால் மாற்ற இயலாது என சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல் நிலைய கணினி பொறுப்பில் இருந்த காவலர், மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News