செய்திகள்
தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது
தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் நாளை முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதால் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.
முழுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.
பால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும்.
வரும் திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.