செய்திகள்
முக கவசம் அணியாத 188 பேருக்கு அபராதம்
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 188 பேரை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியில் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்செய்புகளூர் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில், பணியாளர்கள் நேற்று புன்செய்புகளூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 188 பேரை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியில் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்செய்புகளூர் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி தலைமையில், பணியாளர்கள் நேற்று புன்செய்புகளூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 188 பேரை பிடித்து தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.