செய்திகள்
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பேருந்து சேவை பாதியாக குறைக்கப்படுகிறது. மருத்துவ சேவைக்காக ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.