செய்திகள்
கைது

ஆரணி அருகே முன்னாள் காதலனை கொன்ற இளம்பெண் கைது

Published On 2020-06-06 14:37 GMT   |   Update On 2020-06-06 14:37 GMT
ஆரணி அருகே திருமணம் செய்ய முட்டுக்கட்டையாக இருந்ததால் முன்னாள் காதலனை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஆரணி:

ஆரணி சைதாப் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது41), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அஜித்குமார் (21) என்பவர் சரணடைந் தார். சுரேசின் காதலி கிருஷ்ணவேணி என்பவர் அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டு, தன்னை காதவித்த தாகவும் ஆனால் சுரேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் கிருஷ்ணவேணி யுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அஜித்குமாரை கைது செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவான கிருஷ்ணவேணியை தேடிவந்தனர்.  இந்நிலையில் முள்ளிப்பட்டு பகுதியில் பதுக்கியிருந்த கிருஷ்ணவேணியை ஆரணி போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:- சுரேசை 10 ஆண்டு களாக காதலித்து வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்ததால் அவரிடம் இருந்து விலகினேன். பின்னர் எனது வீட்டின் அருகே சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்த அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பல மாதங்களாக தணிமையில் இருந்து வந்தோம். இருவருக்கும் பிடித்ததால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இந்த வி‌ஷயம் சுரேசுக்கு தெரியவந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறு செய்து வந்தார். எனவே சுரேசை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

அதன்படி சம்பவத்தன்று சுரேசுடன் வழக்கமாக சந்திக்கும் சைதாப்பேட்டை ஏரி கால்வாய் அருகே வரவழைத்து பேசி கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அஜித்துடன் சேர்ந்து சுரேசை அடித்து கொலை செய்தோம். அஜித்குமார் கைதான நிலையில் நான் தலைமறைவாகினேன்.

கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்தேன். எங்களது குடும்பத்தாரையும் உறவினர் களையும் பார்க்க முள்ளிப்பட்டிற்கு வந்தபோது போலீசார் கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News