செய்திகள்
கைது

துவரங்குறிச்சியில் வங்கிக்குள் மாமனாருக்கு பாட்டில் குத்து- மருமகன் கைது

Published On 2020-06-05 08:47 GMT   |   Update On 2020-06-05 08:47 GMT
துவரங்குறிச்சியில் வங்கிக்குள் மாமனாருக்கு பாட்டில் குத்திய மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி அருகே புத்தாநத்தத்தை சேர்ந்தவர் சையது உமர் கான்(வயது 49). இவர் தனது மகளுடன் துவரங்குறிச்சியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் எடுக்க சென்றார். அப்போது, வங்கிக்குள் இருந்த ஒரு வாலிபர், அவருடைய நெற்றியில் திடீரென பாட்டிலால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், துவரங்குறிச்சி போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், சையது உமர் கானின் மகளை திருமணம் செய்து விட்டு, பின்னர் விவாகரத்து செய்த அன்சாரி என்பதும், முன் விரோதம் காரணமாக அவரை தாக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அன்சாரியை கைது செய்தனர்.
Tags:    

Similar News