செய்திகள்
கைது

திருப்பூரில் குடும்ப தகராறில் பெண் போலீசை கத்தியால் குத்திய கணவர் கைது

Published On 2020-06-02 08:41 GMT   |   Update On 2020-06-02 08:41 GMT
திருப்பூரில் குடும்ப தகராறில் பெண் போலீசை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(35). இவர் திருப்பூரில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவராணி(29). இவர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர்கள் திருப்பூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு கண்ணனுக்கும், அவரது மனைவி சிவராணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிவராணியை குத்தினார். இதில் அவருக்கு கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் போலீசை கத்தியால் குத்திய அவரது கணவர் கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

Similar News