செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல்

Published On 2020-05-27 08:51 GMT   |   Update On 2020-05-27 08:51 GMT
ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இலங்கை மந்திரியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் மரணம் அடைந்தார். 55 வயதான அவர், உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இலங்கை அரசில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி துறை மந்திரியாக ஆறுமுகன் தொண்டமான் இருந்தார். அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

திறமைமிக்க அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர்கள் என்ற பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினருக்கும், இலங்கை மக்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News