செய்திகள்
கோப்பு படம்

தகராறை தடுத்த போலீஸ் ஏட்டு சட்டை கிழிப்பு - தாக்குதல் வாலிபர் கைது

Published On 2020-05-25 12:19 GMT   |   Update On 2020-05-25 12:19 GMT
நாகர்கோவில் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:

பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கில்டாபாய் (வயது 37).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரசலம் (30). அவரது தாயார் லீலா (63) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று தாய், மகன் இருவரும் கில்டாபாயிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ரோந்துவந்த கீரிப்பாறை போலீஸ் ஏட்டு தேவதாசன் தகராறை தடுத்தார். ஆத்திரமடைந்த ரசலம், போலீஸ் ஏட்டு தேவதாசனை சரமாரியாக தாக்கியதுடன் அவரது சட்டையையும் கிழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயம் அடைந்த போலீஸ் ஏட்டு தேவதாசன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தேவதாசன் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ரசலம் மற்றும் அவரது தாயார் லீலா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ரசலத்தை கைது செய்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கில்டாபாயும் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரசலம் மற்றும் அவரது தாயார் லீலா மீது இந்திய தண்டனைச்சட்டம் 294(பி), 323, 506(2) ஐ.பி.சி., பென் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News