செய்திகள்
இருதரப்பினரிடையே மோதல்

இருதரப்பினர் இடையே மோதல்- 2 பேர் கைது

Published On 2020-05-23 13:29 GMT   |   Update On 2020-05-23 13:29 GMT
செங்கம் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

செங்கம் தாலுகா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரது தம்பி சம்பத்ராஜ். இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். அண்ணன், தம்பிக்கு இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் இருதரப்பினர் மோதலாக மாறியது.

இதில் படுகாயம் அடைந்த முருகன், சம்பத்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டு (25), முத்துராமன் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News