செய்திகள்
கைது

சிறுமிகளிடம் சில்மி‌ஷம் - டெய்லர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2020-05-23 09:37 GMT   |   Update On 2020-05-23 09:37 GMT
திண்டுக்கல் அருகே சிறுமிகளிடம் பாலியல் சில்மி‌ஷம் செய்த டெய்லர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சத்திரப்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 25). டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நகர் தெற்கு போலீசார் குழந்தை சாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (34) என்பவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கள்ளி மந்தயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசனை கைது செய்தார்.

Tags:    

Similar News