செய்திகள்
மரணம்

கருமாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

Published On 2020-05-23 07:47 GMT   |   Update On 2020-05-23 07:47 GMT
கருமாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செக்கானூரணி:

மதுரை கருமாத்தூர் அருகே உள்ள புளியகவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் மனைவி ராஜீ (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜீ தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அவர் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜீ பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News