செய்திகள்
நெல்லித்துறை வனப்பகுதியில் வெள்வேல் மரப்பட்டை திருடியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நெல்லித்துறை வனப்பகுதியில் வெள்வேல் மரப்பட்டை திருடியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட நெல்லிதுறை காப்புக் காட்டில் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்த வெள்வேல் மரத்தின் பட்டைகளை உரித்து திருடியதாக நந்தவனப் புதூரை சேர்ந்த செல்வம்(45) என்பவர் வனத்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதுகுறித்து அறிக்கை தயார் செய்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் மாவட்ட வன அலுவலருக்கு அனுப்பி வைத்தார். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.