செய்திகள்
ஊரடங்கு உத்தரவு - கோப்புப்படம்

ஊரடங்கை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 427 வழக்குகள் பதிவு

Published On 2020-05-14 08:30 GMT   |   Update On 2020-05-14 08:30 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக 20 ஆயிரத்து 427 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை கடைபிடிக்காமல் ஊர் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட் டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக 20 ஆயிரத்து 427 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்றுமட்டும் மாவட்டத்தில் 183 வழக்கு பதிவு செய்யப்பட்டு 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News