செய்திகள்
அரிசி

திருப்பத்தூர் அருகே நிவாரண உதவிகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

Published On 2020-04-28 13:48 GMT   |   Update On 2020-04-28 13:48 GMT
திருப்பத்தூர் அடுத்துள்ள சந்திரபுரம் ஊராட்சியில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து ஏழை பொதுமக்களுக்கு அரிசி தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி சந்திரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அடுத்துள்ள சந்திரபுரம் ஊராட்சியில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து ஏழை பொதுமக்களுக்கு மற்றும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி சந்திரபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குனர் இயக்குனர் அருண் கலந்துகொண்டு அரிசி தொகுப்பு பையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் ஊராட்சி செயலாளர் கண்ணகி சாமுவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News