செய்திகள்
கைது

மன்னார்குடி அருகே மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற பெண் கைது

Published On 2020-03-30 08:07 GMT   |   Update On 2020-03-30 08:07 GMT
மன்னார்குடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 549 குவார்ட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகவள்ளி (வயது 47) இவர் அந்த பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக விற்று வருவதாக மன்னார்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து எஸ்.எஸ்.ஐ. உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்த சண்முகவள்ளியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.55 ஆயிரம் மதிப்பிலான 549 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News