செய்திகள்
கைது

தடை உத்தரவுக்கு எதிராக போலீஸ் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபர் கைது

Published On 2020-03-26 10:09 GMT   |   Update On 2020-03-26 10:09 GMT
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவுக்கு எதிராக போலீஸ் அதிகாரிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை கரிமேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ரங்கராஜ். இவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விமர்சித்து கருத்துகள் இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியபோது மதுரை நடராஜன் நகரைச் சேர்ந்த கபிலன் (37) என்பவர் குறுஞ்செய்தியை அனுப்பியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 144 தடை உத்தரவை தவறாக சித்தரித்தும் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பும் வகையிலும் கருத்து தெரிவித்ததாக கபிலனை, கரிமேடு போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News