செய்திகள்
கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை
கபிஸ்தலம் அருகே தீராத வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள புது குடிசை கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது28). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சொந்த ஊரான புது குடிசை கிராமத்திற்கு வந்து மருத்துவரிடம் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம்தேதி வயிற்றுவலி அதிகரித்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கபிஸ்தலம் அருகே உள்ள சீதா லட்சுமிபுரம் கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ்(65). சமையல் பணி செய்து வந்தார். தீராத வயிற்று வலி காரணமாக மனமுடைந்த சுபாஷ் பூச்சி மருந்தை குடித்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி(50)கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள புது குடிசை கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேசன் (வயது28). இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சொந்த ஊரான புது குடிசை கிராமத்திற்கு வந்து மருத்துவரிடம் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ம்தேதி வயிற்றுவலி அதிகரித்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து விட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கபிஸ்தலம் அருகே உள்ள சீதா லட்சுமிபுரம் கிராமத்தில் வசிப்பவர் சுபாஷ்(65). சமையல் பணி செய்து வந்தார். தீராத வயிற்று வலி காரணமாக மனமுடைந்த சுபாஷ் பூச்சி மருந்தை குடித்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி(50)கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.