செய்திகள்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 6 பேர் பலி

Published On 2020-03-20 11:06 GMT   |   Update On 2020-03-20 11:06 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

படுகாயம் அடைந்த 4 தொழிலாளர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 2 வாகனங்களில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் .

தொடர்ந்து வெடிபொருட்கள் வெடிப்பதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News