செய்திகள்
கோப்புப்படம்

வந்தவாசி அருகே பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2020-03-20 10:41 GMT   |   Update On 2020-03-20 10:41 GMT
வந்தவாசி அடுத்த புலிவாய் செல்லும் மலை அடிவாரத்தில் பைக்கில் சென்ற இளம்பெண்ணின் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (27) பட்டதாரி பெண்ணான இவர் நேற்று வந்தவாசியில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு தனது பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.   

காலை 11 மணி அளவில் வீடு திரும்பிய பாக்கியலட்சுமியிடம் காஞ்சிபுரம் புலிவாய் இணைப்பு சாலை  மலை அடிவாரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர்  வழிமறித்து முகவரி கேட்பது போல் கேட்டு திடீரென பாக்கியலட்சுமி அணிந்திருந்த ஒரு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் காஞ்சிபுரம் சாலையில் மாயமானார்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்  ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News