செய்திகள்
விளாத்திகுளம் அருகே விஷம் குடித்த விவசாயி மரணம்
விளாத்திகுளம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரத்தை சேர்ந்தவர் சண்முகபெருமாள் (வயது 45), விவசாயி. இவரது மனைவி மகாலெட்சுமி. சண்முகபெருமாள் குடும்ப பிரச்சனை காரணமாக சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சண்முகபெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரத்தை சேர்ந்தவர் சண்முகபெருமாள் (வயது 45), விவசாயி. இவரது மனைவி மகாலெட்சுமி. சண்முகபெருமாள் குடும்ப பிரச்சனை காரணமாக சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சண்முகபெருமாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.