செய்திகள்
விபத்து

தாராபுரத்தில் விபத்து- முன்னாள் எம்.பி.யின் மகன் பலி

Published On 2020-03-13 10:26 GMT   |   Update On 2020-03-13 10:26 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கார் விபத்துக்குள்ளானதில் பழனி தொகுதி முன்னாள் எம்.பி.யின் மகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாராபுரம்:

பழனி தொகுதி முன்னாள் எம்.பி.யின் மகன் நல்லதம்பி (வயது 80). இவர் ஈரோடு மாவட்டம் கணபதி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நல்லதம்பியின் மனைவி யசோதா. இவர்களுக்கு மணிவண்ணன், கவுதம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.

சம்பவத்தன்று நல்லதம்பி புதிய காரில் உறவினர் ஒருவருடன் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டார். காரை அவரது மகன் மணிவண்ணன் ஓட்டினார்.

கார் தாராபுரம் வெள்ளை கவுண்டன் வலசு பிரிவு அருகே சென்றது. அப்போது கல்லூரி பஸ் நின்றது. அதில் இருந்து மாணவிகள் இறங்கினர். அப்போது பஸ் மீது கார் வேகமாக மோதியது.

விபத்து குறித்து அறிந்ததும் அலங்கியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார். காரை ஓட்டிய மணிவண்ணன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். காயம் அடைந்த நல்லதம்பியின் உறவினரை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான நல்லதம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நல்லதம்பியின் தம்பி வேணுகோபால் பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News